උතුරු, නැගෙනහිර සහ වතුකරය ජනතාව නියෝජනය කරන විපක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතාගේ ප්රධානත්වයෙන් අද (10) පාර්ලිමේන්තුවේ පිහිටි විපක්ෂ නායක කාර්යාලයේදී පැවැත්විණි.
මෙහිදී විශේෂයෙන් වර්තමාන ආර්ථික තත්ත්වයත් සමඟ උතුරු නැගෙනහිර සහ වතුකරයේ ජනතාව මුහුණ දෙන සමාජ, ආර්ථික හා ජීවන ගැටලු පිළිබඳ ව විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා විසින් පැමිණ සිටි මන්ත්රීවරුන්ගෙන් තොරතුරු විමසා සිටියේය.
උතුරු නැගෙනහිර සහ වතුකරයේ ජනතාවගේ වත්මන් ජීවන තත්ත්වය, ආර්ථික තත්ත්වය සහ පවුල් ආදායම් මට්ටම කෙරෙහි රටේ වර්තමානයේ පවතින උද්ධමනකාරී තත්ත්වයේ බලපෑම, දෛනික ජීවන වියදම ඉහළ යාම හමුවේ ඔවුන් මුහුණ දෙන දුෂ්කරතා මෙන් ම මෙම ප්රදේශවල පවතින යටිතල පහසුකම්වල ගැටලු පිළිබඳව ද මෙහිදී ප්රධාන වශයෙන් අවධානය යොමු විය.
එමෙන්ම උතුරු නැගෙනහිර සහ වතුකරයේ ජනතාවගේ සෞඛ්ය හා අධ්යාපන අවශ්යතා, ගුණාත්මක සෞඛ්ය සේවාවක් සඳහා පවතින ප්රවේශය, පාසල් අධ්යාපනය හා දරුවන්ගේ පෝෂණ මට්ටම් සම්බන්ධයෙන් පවතින ගැටලු පිළිබඳව ද දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි. මෙහි දී උතුරු නැගෙනහිර සහ වතුකරයේ ජනතාව දීර්ඝ කාලයක් පුරා මුහුණ දෙමින් සිටින සමාජ හා ආර්ථික ගැටලු පිළිබඳව ප්රායෝගික අවධානය යොමු කරමින්, ඔවුන්ගේ ජීවන තත්ත්වය නගාසිටුවීම සඳහා ගත යුතු ඉදිරි ක්රියාමාර්ග පිළිබඳව ද මෙහිදී අදහස් රැසක් හුවමාරු විය.
උතුරු හා නැගෙනහිර ජනතාව මුහුණ දෙන ගැටලු මෙන්ම වතුකරයේ ජනතාව මුහුණ දෙන ගැටලු පිළිබඳව ද අඛණ්ඩ ව අවධානය යොමු කරමින්, ඒ සඳහා පාර්ලිමේන්තුව තුළ මෙන් ම ඉන් පිටතදී ද අවශ්ය මැදිහත්වීම් සිදු කිරීමේ වැදගත්කම පිළිබඳ ව මෙහි දී විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා විසින් මෙම සාකච්ඡාවට එක්ව සිටි මන්ත්රීවරුන් හමුවේ අවධාරණය කරන ලදි. එමෙන් ම ජනතාවගේ සැබෑ ගැටලු පිළිබඳ ව ප්රාදේශීය මට්ටමින් තොරතුරු රැස් කර ඒවාට විසඳුම් ලබා දීම සඳහා විපක්ෂයේ මන්ත්රීවරුන් අතර වඩාත් සමීප සම්බන්ධීකරණයක් පවත්වාගෙන යාම සම්බන්ධයෙන් ද මෙහි දී වැඩිදුරටත් අවධානය යොමු විය.
මෙම සාකච්ඡාව සඳහා කේ. එස්. කුගතසන්, එම්. ඒ. එම්. තාහීර්, වෛද්ය ඊ. ශ්රීනාත්, කේ. කෝඩේස්වරන්, G. ශ්රීනේෂන්, M.S. U. ලෙබ්බේ, ඒ. අඩික්කලනාදන්, වෛද්ය පී. සත්යලිංගම්, කේ. කාදර් මස්තාන්, එස්. රාසමානික්යම්, මුජිබර් රහුමාන් සහ රිෂාඩ් බදියුදීන් යන විපක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් සහභාගී වූහ.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநித்திவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இங்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும் தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அவ்வாறே, குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி மற்றும் பிள்ளைகளின் போசாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும், இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தசந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், கௌரவ (டாக்டர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.













